Moral Stories - Tamil
ஜாதகக் கதைகள் – ஓநாயும், நீர்கீரிகளும்
நீங்கள் ஒருபோதும் எப்போதும் நண்பர்களுடன் சண்டையிடக்கூடாது இரண்டாம் நீர்க்கீரி சொன்னது போல இரண்டு பேர்களுக்கு இடையே நடைபெறும் சண்டை மூன்றாமவருக்கு நன்மையை தந்து விடும் எனவே நண்பர்களுடன் சண்டையிடக் கூடாது

ஓநாயும், நீர்கீரிகளும்
ஆண் ஓநாய், பெண் ஓநாய்… நீர்க்கீரி 1&2, VOICEOVER.
VOICEOVER: ஒரு காட்டில் ஒரு ஆண், ஒரு பெண் ஓநாய்கள் ஜோடியாக வசித்து வந்தன… அவை ஒன்றை ஒன்று மிகவும் நேசித்து வந்தன… பெண் ஓநாயின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்க… ஆண் ஓநாய் மிகவும் விரும்பியது…
VOICEOVER: ஒரு நாள் பெண் ஓநாய் சொன்னது…
பெண் ஓநாய்: அன்பே இன்று மீன் உண்ணவேண்டும் என ஆசையாய் இருக்கின்றது…
ஆண் ஓநாய்: கவலைப் படாதே ஆருயிரே… நீ விரும்பிய மீனைக் கொண்டு வருகிறேன்…
VOICEOVER: இதை சொன்ன உடன் மீனைத் தேடி வெளியேபுறப்பட்டது ஆண் ஓநாய்…போகும் வழியில் தானே இவ்வாறாக எண்ணிக் கொண்டது…
ஆண் ஓநாய்: என் மனைவியிடம் மீனைக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டேன்… மீன் பிடிப்பது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே… எப்படி தான் என் மனைவியின் தேவையை பூர்த்தி செய்வேனோ…
VOICEOVER: இப்படி எண்ண அலைகளில் மூழ்கிய படியே… நதிக் கரையை அடைந்த ஓநாய்… அங்கு கரையோரம் அமர்ந்து… நீர் அலைகளில் துள்ளி விளையாடும்… மீன்களை பேராசையோடு… உற்று நோக்கியது…
VOICEOVER: எங்கும் பொங்கியோடும் ஆற்று வெள்ள சுழல்களைக் கண்டு… பயந்து ஒதுங்கியது ஓநாய்… எப்படி செய்யலாம்… என்ன செய்யலாம்… என்று உயிர் மேல் ஆசையோடு… சிந்தனையில் மூழ்கியது…
நீர்க்கீரி1: நான் தான் முதலில் பிடித்தேன்.. அதிகப் பங்கு எனக்குத் தான்…
நீர்க்கீரி2: இல்லை எனக்குத்தான்… நான் தான் அதை இழுத்துப் போட உதவினேன்… அதனால் எனக்குத் தான்…
நீர்க்கீரி1: நான் தான் முதலில் பிடித்தேன்
நீர்க்கீரி2: இல்லை…நான் தான் முதலில்… நீர்க்கீரி1: எனக்குத்தான் பெரும்பகுதி தரவேண்டும்…
நீர்க்கீரி2: நான் தான் இழுத்தேன்… எனக்கே பெரும்பகுதி வேண்டும்…
VOICEOVER: இரண்டு நீர்கீரிகளும்… தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்தன…
VOICEOVER: தந்திரம் நிறைந்த ஓநாய் எண்ணியது…
VOICEOVER: இந்த முட்டாள்தனமான நீர்க்கீரிகள்… இந்த மீன்பிடிப்பை முன்னிட்டு சண்டை செய்கின்றன… இவர்களுக்கு நீதி வழங்குவது போல நடித்து… நான் பெரும்பகுதி மீனை பெற்றிட வேண்டும்…
உடனே ஓநாய் அவைகள் இடத்திற்கு விரைந்து நடந்து சென்றது…
ஆண் ஓநாய்: நண்பர்களே… உங்களுக்கு என்ன பிரச்சினை….
நீர்க்கீரி 1: பெரிய பிரச்சினை இல்லை… நாங்கள் இருவரும் சேர்ந்து… ஒரு பெரிய மீனை கொன்றோம்… இப்போது அதை எப்படி பங்கிடலாம் என்பது தான் பிரச்சினை…
ஆண் ஓநாய்: பாருங்கள்… நீங்கள் விரும்பினால்… நான் உதவுகிறேன்.. மற்றவர் பிரச்சினைகளில் தீர்வு காண்பவன்… நான்…. நீங்கள் விரும்பினால்… இணக்கமான… ஒரு தீர்வை தருகிறேன்…
நீர்க்கீரி 1: மிகவும் சரி… எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை… ஆனால் அவனுக்கும் ஆட்சேபணை இல்லாத பட்சத்தில்…
நீர்க்கீரி 2: எனக்குக் கூட ஆட்சேபனை ஒன்றும் இல்லை
ஆண் ஓநாய்: இதைத்தான் எதிர்பார்த்தேன்… நான் சென்று. பங்கிட வசதியாக ஒரு கத்தியை கொண்டு வருகிறேன்…
நீர்க்கீரி 1: ஆமாம்… உடனே சென்று வாருங்கள்… நாங்கள் காத்திருக்கிறோம்…
VOICEOVER: ஓநாய் உடனே கத்தியை எடுத்து வர… காட்டிற்குள் சென்றது… கத்தி ஒன்றை கவ்விய படி… திரும்பி வந்தது…
இரண்டு நீர்க் கீரிகளும்… ஓநாய் ஒரு பெரிய கத்தியுடன் மகிழ்ச்சியோடு திரும்புவதைப் பார்த்தன…
ஆண் ஓநாய்: வாருங்கள் நண்பர்களே.. இப்போது உங்கள் பிரச்சினையை தீர்த்து வைக்கின்றேன்…
VOICEOVER: இவ்வாறு ஓநாய் சொல்லிக் கொண்டே… மீனை மூன்று துண்டுகளாக நறுக்கியது… முதலில் தலையையும், பின்பு வாலையும் வெட்டியது ஓநாய்…
ஆண் ஓநாய்: முதலில் நீ தலையை பிடித்ததால் உனக்கு தலை பாகம்… முதலில் நீ வாலைப் பிடித்ததால்… உனக்கு வால் பாகம்…
VOICEOVER: இரண்டு நீர்க்கீரிகளும் தங்களது பாகங்களை எடுத்துக் கொண்ட பின்… மீனின் நடுப்பகுதி மீதே இரண்டின் பார்வை படிந்திருந்தது.. இரண்டுமே ஓநாய் நடுப்பகுதி மீனை… இரண்டாக ஆக்கி… தங்களது பங்கை பங்கிட்டு தரும்… என்று நினைத்தது… ஆனால் ஓநாய் அதை… தனக்கு உரியது என்று எடுத்துக் கொண்டது…
நீர்க்கீரி 1: நண்பரே… மீதி துண்டை பங்கிட மாட்டீர்களா…
ஆண் ஓநாய்: இந்த துண்டு உங்களைச் சேர்ந்தது அல்ல… என் வேலைக்குக் கிடைத்த கூலி… கத்தியை எடுத்து வந்து… அதை அறுத்து… பங்கீடு செய்து உங்களுக்காக பாடுபட்ட எனக்கு உரிய இது… என்னுடைய கடின உழைப்பிற்காக… உங்களது உற்ற நண்பனாகிய எனக்கும் ஒரு பங்கு உண்டல்லவா…
VOICEOVER: இவ்வாறு சொல்லிய படியே… ஓநாய் மீனின் நடுப்பகுதியான பெரியத் துண்டை கவ்வியபடியே சென்று விட்டது… ஓநாய் பெரிய பகுதியுடன் ஓடியதை பார்த்தபடியே… மலைத்து நின்ற நீர்க்கீரிகள்… என்ன நடந்தது என்று நினைப்பதற்குள்… காலம் கடந்து விட்டது…
நீர்க்கீரி 1: நண்பனே… நமது பங்கைப் பெற…நமக்குள் பேசி தீர்த்துக் கொண்டிருந்து இருக்கலாம்… நமக்கு தலையையும், வாலையும், நமது பங்கென்று சொல்லி… அந்த ஓநாய் பெரும்பகுதியோடு… ஓடி விட்டது… இரண்டு நண்பர்கள் இடையேயான பிரச்சினை மூன்றாம் நபருக்கு… நன்மை விளைவிக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்… இந்த நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்க வேண்டும்.. . ஒரு சின்ன பேதம் கூட நம்மை பாதிக்கும்… எக்காரணம் கொண்டும்… மற்றவரை நமது எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது…
VOICEOVER: எனது குழந்தைகளே.. நீங்கள் ஒருபோதும்… எப்போதும்… நண்பர்களுடன் சண்டையிடக்கூடாது… இரண்டாம் நீர்க்கீரி சொன்னது போல இரண்டு பேர்களுக்கு இடையே நடைபெறும் சண்டை… மூன்றாமவருக்கு நன்மையை தந்து விடும்… எனவே நண்பர்களுடன் சண்டையிடக் கூடாது என்பதே இதன் நீதியாகும்…