Moral Stories - Tamil
ஹிதோபதேச கதைகள் – குருட்டுக் கழுகு
ஒரு பொழுதும் நீங்கள் பொய்யான புகழுரைக்கு மயங்காதீர்கள்… அது அழிவுக்கு உங்களைக் கொண்டு செல்லும்

குருட்டுக் கழுகு
காட்சி-1 கழுகு, பூனை, VOICEOVER…
VOICEOVER: வெகு காலத்திற்கு முன்பு… ஒரு பெரிய மரம் ஒன்றில்… ஒரு குருட்டுக் கழுகு ஒன்று வசித்து வந்தது… அந்த மரத்தின் பொந்தையே… தனது வீடாக்கிக் கொண்டது கழுகு… நிறைய பறவைகள் அந்த மரத்தின் கிளைகளில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன… அந்த பறவைகள்… குருட்டுக் கழுகின் மேல்… பரிதாபம் காட்டியது… தங்களது உணவுப் பொருட்களின் சில மிச்சங்களை… குருட்டுக் கழுகுக்கும் கொடுத்து உதவி வந்தன…
VOICEOVER: அது போலவே… பறவைகள் இரைதேடப் போகும் சமயங்களில்… அவற்றின் குஞ்சுகளை பாது காத்து வந்தது கழுகு… ஒரு நாள் அந்த வழியே பூனை ஒன்று நடந்து சென்றது… அப்போது சிறு குஞ்சுகளின் “க்ரீச்” என்ற சத்தத்தைக் கேட்க நேர்ந்தது… உடனே அது…
பூனை: இந்த மரத்தின் மேல் உள்ள கூடுகளில் இளம் குஞ்சுகள் இருக்கக் கூடும்… பல நாட்களுக்கு அவை எனக்கு விருந்து படைக்கும்… இந்த இடத்தை அடைந்த நான்… எவ்வளவு அதிர்ஷ்டசாலி… ம்…
VOICEOVER: இப்படியான எண்ணங்களுடன் பூனை மரத்தின் உச்சியை அடைந்தது.. பூனையைக் கண்டதும் இளம்குஞ்சுப் பறவைகள் மேலும் “க்ரீச்” என்றது… குஞ்சுகளின் கூக்குரல் குருட்டுக் கழுகை உஷார் படுத்தியது… அது உடனே வெளியே வந்து…
கழுகு: ம்… யாரது…
VOICEOVER: கழுகு தனது தலையை இரண்டு பக்கமும் ஆட்டுவதைப் பார்த்ததும்… இது குருட்டுக் கழுகு என்று பூனைக்குப் புரிந்து விட்டது… கழுகை முட்டாள் ஆக்குவதற்காக… பூனை சொன்னது…
பூனை: ஓ கழுகாரே.. நான் உம்மைத் தான் பார்க்க வந்தேன் ஐயா…
கழுகு பூனையா… பூனைகள் எங்களுக்குத் தொந்தரவும், அபாயமும் தரக்கூடியது… உடனே இங்கிருந்து சென்று விடு…
பூனை: ஓ.. வேண்டாம்… என்னை வெளியே அனுப்பாதீர்கள்… உங்களையோ இந்த குஞ்சுப் பறவைகளையோ தாக்குவதற்காக இங்கு வரவில்லை… நீங்கள் உங்கள் அன்பான செயல்கள் மூலம்… இந்த குஞ்சுகளை பாதுகாப்பதை பற்றி கேள்விப்பட்டு… உங்களைக் காண விரும்பி வந்தேன்… உங்களை என் குருவாக நினைக்கிறேன்… எனக்கு உங்கள் ஆசிகளை வழங்கி… உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்… கழுகாரே…
கழுகு சரி ஆகட்டும்… என் சீடனாக உன்னை ஏற்கிறேன்… ஆனால் இந்த குஞ்சுகள் உன்னருகே இருப்பது அபாயம் அல்லவா… பூனை: இல்லை குருவே… நீங்கள் ஒருபோதும் பயப்படத் தேவையில்லை… நான் மாமிசத்தையும், முட்டைகளையும் உண்பதை விட்டு ஒரு வருடம் ஆகிறது…
VOICEOVER: பூனையின் பொய்யான புகழ் மொழிகள் கழுகின் இதயத்தை கவர்ந்து இழுத்தாலும், சிறிது எச்சரிக்கையாகவே பேசியது…
இந்த வார்த்தைகளால் குருட்டுக் கழுகின் எச்சரிக்கை உணர்வும்… போயே போயிற்று…
VOICEOVER: அன்று முதல் ஒவ்வொரு நாளும்… பூனை கழுகை காண வருவதும்… ஆன்மீக விஷயங்களை பேசுவதுமாக இருந்து வந்தது… குஞ்சுகளை அது ஒன்றுமே செய்ய வில்லை..
VOICEOVER: பல நாட்கள் இவ்வாறு கழிந்ததும்… குருட்டுக் கழுகு பூனையை முழுமையாக நம்பத் தொடங்கியது… குஞ்சுப் பறவைகளும் பயமின்றி பூனையின் பக்கம் சென்று வந்தன…
VOICEOVER: தந்திரமான பூனை… கழுகின் பூரண நம்பிக்கையை பெற்று காத்திருந்தது… அது ஒரு நாள் அதன் சுய உருவைக் காட்டியும் விட்டது… ஒவ்வொருநாளும் பறவைகள் இரை தேடச் சென்ற உடன்… நடுப்பகலில் குருட்டுக்கழுகு சிறிது நேரம் குட்டித்தூக்கம் போடும்… பூனைக்கும் இது தெரியும்…
VOICEOVER: ஒரு நாள் இந்த தந்திரமான பூனை… குஞ்சுகளின் மீது பாய்ந்து… அவற்றை எல்லாம் தின்றே விட்டது.. மிச்சம் இருந்த எலும்புகள் இறகுகள் இவற்றை… மெல்ல கழுகின் பொந்துக்குள் போட்டு விட்டு… மெல்ல அந்த இடத்தை விட்டுப் போய் விட்டது…
VOICEOVER: அன்று மாலை பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பியதும்… தங்கள் குஞ்சுகள் காணாமல் போனதைக் கண்டதும்… பறவைகள் என்ன நடந்தது என்று ஆராயத் தொடங்கின…. சுற்றும் முற்றும் பார்த்தும் குஞ்சுகளைக் காணவில்லை… குருட்டுக் கழுகின் பொந்தின் அருகே சென்று விவரத்தைக் கேட்க புறப்பட்டனர்… கழுகின் பொந்திற்கு சென்று பார்த்தபோது… அங்கே குஞ்சுப் பறவைகளின் சிறு எலும்புகளைக் கண்டதும்… குருட்டுக் கழுகுதான் அவைகளைக் கொன்று தின்றிருக்க வேண்டும்.. என்று முடிவு கட்டின…
VOICEOVER: அவைகள் தங்களின் நகங்களின், அலகுகளால் கொத்திக் குதறி… குருட்டுக் கழுகை பொந்திலிருந்து வெளியே தள்ளி விட்டன… கீழே விழுந்த குருட்டுக் கழுகு… இறந்தே போனது…
VOICEOVER: குழந்தைகளே.. ஒரு பூனை ஒரு கழுகை எப்படி முட்டாள் ஆக்கியது பார்த்தீர்களா.. பூனையின் வார்த்தைகளை குருட்டு நம்பாதிருந்தால் கழுகு இந்நேரம் உயிரோடு இருந்திருக்கும்… எனவே ஒரு பொழுதும் நீங்கள் பொய்யான புகழுரைக்கு மயங்காதீர்கள்… அது அழிவுக்கு உங்களைக் கொண்டு செல்லும்…