Moral Stories - Tamil
Paramartha Guru – Muttalin Pasi – (Part -1) பரமார்த்த குரு – முட்டாளின் பசி
சுயபுத்தியும் கிடையாத சொல்புத்தியும் கிடையாதுஇவங்களுக்குப் பட்டா தான் தெரியும்
முட்டாளின் பசி
காட்சி – 1
மட்டி, மடையன், முட்டாள், மூடன், பேயன் முட்டாள் : ஏய் மூடா…. ஏய்… என்னால… என்னால இனிமே நடக்க முடியாதுடா… பசி வயித்த கிள்ளுது…
மூடன்: ஏண்டா… ஒரு மூட்டை அரிசியை முழுங்குன மாதிரி வயிறு… இதைப் போயி யாருடா கிள்ள முடியும்….
முட்டாள்: ஏய்… தொடப்பக்குச்சி… கேலி பேசாத… அப்புறம் கோபம் வந்தது…
மட்டி: அவன் வாயால ஊதுனாலே போதும்… அதோ அந்த மரத்து மேல போய் விழுவ…
மடையன்: சரி சரி தமாஷ் எல்லாம் போதும்… அதோ அங்க கைகாட்டி இருக்கு… அது எந்த ஊருக்கு போகுதுன்னு பாப்போம்…
பேயன்: கைகாட்டி… போ…காதுடா… நா…மதான் போகணும்…
காட்சி – 2
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன், வழிப்போக்கன் கஞ்சன்பட்டி என பெயர் பலகை எழுதியிருப்பது….
அனைவரும் : என்னா எழுதியிருக்குன்னே தெரியலையே…
முட்டாள்: இந்த கைகாட்டி எந்த ஊரைக் காட்டுதோ… அங்க இருந்து தான் முளைச்சி வந்திருக்கணும்… புடுங்கிப் பாத்தா தெரிஞ்சிட்டு போகுது…டேய்… முட்டாள்… நில்லுடா…
வழிப்போக்கன்: அட… என் பேரைச் சரியா சொல்றாரே… இவரு பெரிய ஞானியா இருப்பாரு போல இருக்கு….
உன் பேரே முட்டாளா? ஆமா…
இவன் மடையன்
அவன் மட்டி…
முட்டாள்: இவன் மூடன்…
இவன் பேயன்
நாங்க எல்லாம் இணைபிரியா நண்பர்கள்…
வழிப்போக்கன்: சரி ஏன் கைகாட்டியை புடுங்கறீங்க…
முட்டாள்: கஞ்சன்பட்டிக்கு போக வழி தேடத்தான்…
வழிப்போக்கன் : ஏம்பா… படிச்சி தெரிஞ்சிக்கக்கூடாது…
முட்டாள்: நாங்க தான் பள்ளிக்கூடத்துல போயி தூங்கிட்டோமே… அதனால படிக்கத் தெரியாது…
வழிப்போக்கன்:சரி சரி… உபதேசம் வேண்டாம்… இதைப் படிச்சி எந்த ஊருக்குப் போகுதுன்னு சொல்லுங்க… சீக்கிரம் போயி பிச்சை எடுத்து சாப்பிடணும்…
வழிப்போக்கன்:ஓ… பிச்சையா… இந்த வழியா தான் கஞ்சன்பட்டிக்கு போகணும்… ஆனா அங்க யாரும் உங்களுக்கு சாப்பாடு போட மாட்டாங்க… பேருக்கு தகுந்த மாதிரி தான், அந்த ஊரு ஜனங்களும் இருப்பாங்க… வேணும்னா என்கூட என் ஊருக்கு வாங்க… நான் சாப்பாடு போடறேன்…
முட்டாள்: சரி சரி… வாங்கடா… நமக்கு சோறு கண்ட இடம் தாண்டா சொர்க்கபுரி…
மூடன்: முட்டாள் அண்ணே… இந்த ஆளு நம்மளை ஏமாத்தப் பாக்கறாரு… நாம கஞ்சன்பட்டிக்கே போகலாம்…
மட்டி: ஆமாமா… நாம பிச்சை எடுத்து சாப்பிடறதைப் பார்த்து…. இந்த ஆளுக்கு வயித்தெரிச்சல்…
மடையன்: அண்ணே… நீங்க உங்க வேலையைப் பார்த்துட்டு போங்க.. நாங்க இப்படியே போறோம்…
வழிப்போக்கன்:ஹ…ஹ…ஹா… ஆங்… சுயபுத்தியும் கிடையாது… சொல்புத்தியும் கிடையாது…. இவங்களுக்குப் பட்டா தான் தெரியும்…. ஹி… ஹி… ஹி…